ரகசிய தகவலும்....கடத்தி வரப்பட்ட தங்கமும்....

ரகசிய தகவலும்....கடத்தி வரப்பட்ட தங்கமும்....

துபாயில் இருந்து உடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 49 லட்சத்தி 56 ஆயிரம்  மதிப்புள்ள 1 கிலோ  தங்கம் பறிமுதல்.

ரகசிய தகவல்:

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

சந்தேகத்தில்...:

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 

விசாரணை:

விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர்.  அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 

பறிமுதல்:

இளைஞரிடம் ரூ. 49 லட்சத்தி 56 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 14 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர். 

கைது:

இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என  விசாரித்து வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மீண்டும் டெல்லி பறந்த ஆளுநர்....காரணம் என்ன?!!!