பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

திருவள்ளூர் அருகே வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி வைத்திருந்த 7 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

திருவள்ளூர் அடுத்த தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி பிரியா தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் தமிழரசனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றிருப்பதால், தமிழரசன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தமிழரசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த 7 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் வீடு கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் பறிபோனதே என அங்கிருந்தவர்கள் கலங்கியது காண்போரை வேதனையடைய வைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த போலீசார், திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.