ரெஜிஸ்டரில் இருந்து தான் நம்பர் எடுத்தேன்!- பாலியல் தொல்லை கொடுத்த செக்யூரிடி!!!

கல்லூரி மாணவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய விடுதி காவலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

ரெஜிஸ்டரில் இருந்து தான் நம்பர் எடுத்தேன்!- பாலியல் தொல்லை கொடுத்த செக்யூரிடி!!!

சென்னையை அடுத்த ஓஎம்ஆர் சாலை படூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2ம் ஆண்டு பி.காம் படிக்கும் மாணவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச வீடியோ ஒன்று வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.

மாணவி செல்ஃபோன் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பியவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு யாருடையது என்பதை கண்டறிந்தபோது, பெண்கள் விடுதியில் காவலாளியாக உள்ள 42-வயதான பாலசுப்பிரமணியின் செல்ஃபோன் எண் என்பது தெரியவந்துள்ளது.

பின், அவரை சிறைபிடித்த கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையிலான போலீசார், அங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்த காவலாளி பாலசுப்பிரமணியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியது குறித்து விடுதி காவலாளி மீது கல்லூரி முதல்வர் திருமோகன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடகுறிச்சி, வைரவபிகுளம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த 42-வயதான பாலசுப்பிரமணி என்பதும், இவர் ‘த்ரிலோச்சனா’ எனும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், படூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெண்கள் தங்கும் விடுதியில் காவலாளியாக இருந்த இவர் மாணவிகள் ‘இன் அவுட்’ பதிவு நோட்டிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவியின் செல்போன் எண்ணை எடுத்து அவர் சுய இன்பம் செய்த ஆபாச வீடியோவை அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்தது என அதிகாரிகள் கூறினர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு திருமணம் ஆகி 12 வயதில் ஒரு மகன் உள்ளதும், இவர் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் பணம் செலுத்தி ஆபச வீடியோக்களை பெற்று பார்த்து வந்ததும் தெரியவந்ததாக தெரிவித்தனர்.