குளத்தில் தவறி விழுந்த நபர் பலி!!!

மரக்காணம் அருகே முன்னூர் கிராம ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

குளத்தில் தவறி விழுந்த நபர் பலி!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் குளத்திற்கு அருகே சென்ற நபர் குளத்திற்குள் தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொது மக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் இறங்கி சடலத்தை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபர் குறித்து பிரம்மதேசம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்த நபர் ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தகோகுல் ( 21 ), இவர் திண்டிவனம் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.