காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது..!

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது..!

சென்னையில் வாகன தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

காமராஜர் சாலை போர் நினைவு சின்னம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வியாசர்பாடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேசன் என்பவரிடம் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகர், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணாக பேசிய பிரசன்ன வெங்கடேன், உதவி ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த உதவி ஆய்வாளர் பிரபாகர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, காவலர் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.