லாரி மோதி 9 பேர் பலி!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் இன்று‌ அதிகாலை லாரி மற்றும் க்ரூஸர் வாகனம் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி 9 பேர் பலி!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுக்காவில் உள்ள பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று க்ரூஸர் வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் க்ரூஸர் வாகனத்தில் இருந்த ஒன்பது பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 15 பேர் துமகூரு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்

 மற்றும் சிரா தாலுக்கா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 குடும்பத்தை சேர்ந்த 24 பேர் பெங்களூருவிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துமகூரு மாவட்டத்தில் க்ரூஸர் வாகனம் விபத்தை சந்தித்தது. இதில் 24 பேரும் காயம் அடைந்துள்ள நிலையில் மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஒன்பது பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குரூசர் வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் லாரியை குரூஷர் வாகனம் முன்னே கடந்து செல்ல முயற்சித்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.