கெமிக்கல் நிறுவனங்களில் 4வது நாளாக வருமானவரி துறை சோதனை!

சென்னையில் மருந்து தயாரிப்பு கெமிக்கல் நிறுவனம் உள்ளிட்ட  இடங்களில் வருமானவரி துறையின்  சோதனை 4 வது நாளாக  நீடிக்கிறது.

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து, கவர்லால் மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகம் கிடங்குகளில் வருமானவரி துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை சயல் மேன்ஷன் வளாகத்தில் இயங்கி வரும் kawman Exact என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் பத்துக்கும் அதிகமான வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் கவர்லால்  & கோ என்ற நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அண்ணாமலை வளாகத்திலும், சௌகார்பேட்டையில் உள்ள அலங்கார் வளாகத்திலும் சென்னை park Town-ல் ,இருக்கும் அலுவலகத்திலும் ஐடி சோதனை நீடிக்கிறது.

சென்னை கிண்டி  சவுக்கார்பேட்டை, எழும்பூர், தாம்பரம்,  குன்றத்தூர் கடலூர் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் 4 வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையில்  பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு  வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.