மனைவியின் துன்புறுத்தலால் கணவர் தூக்கிட்டு தற்கொலை- மனைவி கைது

சென்னையில் மனைவியின் துன்புறுத்தலால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் துன்புறுத்தலால் கணவர் தூக்கிட்டு தற்கொலை- மனைவி கைது

சென்னையில் மனைவியின் துன்புறுத்தலால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்திய குமார். தி.மு.க 115 வது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளரான இவருக்கும், அவரது மனைவி நிஷாந்தினிக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான வித்தியகுமார், கடந்த 4 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இறக்கும் முன்பு வித்திய குமார் தமது செல்போனில் பேசி எடுத்த வீடியோ ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் தனது மனைவியுன் அவரது குடும்பத்தாரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், அதனை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை மேற்கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி நிஷாந்தினி கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.