உடம்பு சரியில்லை சார்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி பொய் சொல்லி தப்பியோட்டம்…  

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடம்பு சரியில்லை சார்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி பொய் சொல்லி தப்பியோட்டம்…   

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாலமுருகன் (37) இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு, பேரூரணி சிறையில விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 23ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்தபோது கைதி தப்பியோடிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏறு்படுத்தியுள்ளது.