மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட தங்க நகைகள்...!!

மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட தங்க நகைகள்...!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்  மருத்துவர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இரயில்வே நிலையம் அருகே, பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது.  இந்த மருத்துவமனையை நடத்தி வரும் பிரேம் குமார் தாஸ் என்பவரின் வீடு மருத்துவமனைக்கு அருகிலேயே உள்ளது.  இந்நிலையில் சென்னையில் படித்து வரும் இவரின் மகளைப் பார்க்க மருத்துவர் பிரேம்குமார் தாஸ் சென்னைக்கு வந்துள்ளார்.

மருத்துவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி காலை வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.  பின்னர் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் பீரோவை உடைத்து அதிலிருந்த 250 சவரன் நகைகளும் பல லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க:  ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!!