சிறுவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோவில் கைது..  

பொள்ளாச்சி அருகே சிறுவனை கட்டாயத் திருமணம் செய்துக் கொண்ட இளம் பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோவில் கைது..   

பொள்ளாச்சி அருகே சிறுவனை கட்டாயத் திருமணம் செய்துக் கொண்ட இளம் பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் இளம் பெண் ஒருவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கரவாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த சிறுவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுவனை கட்டாயப்படுத்தி அந்த இளம் பெண் திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.