நண்பர்கள் தினத்தில் நண்பனை கொன்றவனை பழிதீர்த்த நண்பர்கள்!

சென்னை ஐ.சி.எப் காவல் எல்லைக்குள் நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க அரங்கேற்றப்பட்ட கொலைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் தினத்தில் நண்பனை கொன்றவனை பழிதீர்த்த நண்பர்கள்!

சென்னை ஐ.சி.எப் காவல் எல்லைக்குள் நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க அரங்கேற்றப்பட்ட கொலைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.சி.எப் காவல் எல்லைக்குள் அலெக்ஸ் என்பவரை 3 பேர் அழைத்து வந்துள்ளனர். அப்போது மூவரின் நண்பர் ஒருவரை கொலை செய்த விவகாரம் தொடர்பாக அலெக்ஸிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் திட்டப்படி, அலெக்ஸ் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினமே கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சித், சூர்யா, நவீன் ஆகிய 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

இந்நிலையில் இன்று கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஆடு சரவணன், சக்திவேல் மற்றும் ஒரு இளஞ்சிறார் என மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.