குடும்ப பிரச்சனை...மனைவி கழுத்தை நெறித்து கொலை... தலைமறைவான கணவனுக்கு வலை...!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை...மனைவி கழுத்தை நெறித்து கொலை... தலைமறைவான கணவனுக்கு வலை...!!

சென்னை அடுத்த புழல் லட்சுமியம்மன் கோயில் முதல் தெருவில் வசிப்பவர் தமிழ்செல்வன். லோடுமேனாக பணிபுருந்து வரும் இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனைவி சரிதாவுடன் மீஞ்சூரில் இருந்து புழலில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் கணவன் மனைவிக்கிடையே குடும்ப சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது சண்டை நடந்த வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்கவே ஏதோ விபரீதம் நடந்துள்ளது என நினைத்த அருகில் இருந்தவர்கள், இது குறித்து புழல் காவல்நிலையதிற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு மனைவி சரிதா இறந்து கிடந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் குடும்ப சண்டையில் மனைவி சரிதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடியது தெரியவந்தது. இவர்  சபரிதாவை  நான்காவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார் என்பது தெரியவந்தது.

மேலும் தலைமறைவான தமிழ்செல்வன் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளதாகவும், அவரை  பிடித்த பிறகே உண்மைசூழ்நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.