போலி பாஸ்போர்ட் சர்ச்சை: உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபிக்கு எதிரான மனு; 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு!

போலி பாஸ்போர்ட் சர்ச்சை: உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபிக்கு எதிரான மனு; 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு!

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐ. பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி வாராகி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுசம்பந்தமான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்கும்படி, எஸ். பி.சி.ஐ.டி - ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வாராகி தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மேலும் மனு அனுப் பியிருந்தார். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், ஐ. பி.எஸ். அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்,  விசாரணையில்  முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நற்சான்று வழங்கியுள்ளதாக குறிப் பிட்டார்.

இதையடுத்து, சம்பவம் மதுரையில் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனவும், மேலும் மதுரைக் கிளை ஐ. பி.எஸ். அதிகாரிக்கு இதே விவகாரத்தில் நற்சான்று அளித்துள்ளது குறித்து மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள், கேள்வி எழுப் பினர்.

அதற்கு மதுரை வரம்புக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையிலும் தாக்கல் செய்ய அனுமதித்து  உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை மனுதாரர் சுட்டிக்காட்டிய போது, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

முன்னதாக, கடந்த மாதம் 27 ஆம் தேதி உளவுத்துறை ஏடிஜி பியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டது குறிப் பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராஜீவ் வழக்கு: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகனை விடுவிக்க கோரி நளினி மனு!