ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியரின் பைக் திருட்டு... மர்மநபர்கள் குறித்து விசாரணை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண் இமைக்கும் நேரத்தில் ஆன்லைன்  டெலிவரி நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியரின் பைக் திருட்டு... மர்மநபர்கள் குறித்து விசாரணை...

ஒசூர் அருகேயுள்ள காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா இவர் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை தனது இருசக்கரவாகனத்தின் மூலம் வாடிக்கையாளார்களுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் பாப்பையா கடந்த 4 ஆம் தேதி ஒசூர் நேதாஜி சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் கடை முன்பு தனது இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு அதன்மேல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ள பொருட்கள் இருக்கும் பையையும் வைத்து விட்டு அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். 

அப்போது அப்பகுதிக்கு வந்த ஒரு மர்மநபர் பாப்பையாவின் நடவடிக்கைகளை நோட்டமிட்டு திடீரென அவரது இருசக்கரவாகனத்தையும் அதன் மேல் இருந்த ஆன்லைன் பொருட்கள் இருந்த பையையும் கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றுள்ளார். அதன் உள்ளே 70 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை கொண்டு பாப்பையை அளித்த புகாரின் அடிப்படையில் ஒசூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.