பாமக பிரமுகர்,  மனைவியுடன் கடத்தப்பட்டு  ஆந்திராவில் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்

திருத்தணியைச் சேர்ந்த பாமக பிரமுகர்,  மனைவியுடன் கடத்தப்பட்டு  ஆந்திராவில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாமக பிரமுகர்,  மனைவியுடன் கடத்தப்பட்டு  ஆந்திராவில் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்

திருத்தணி, மாருதி தெருவில் வசிப்பவர் சஞ்சீவி ரெட்டி. 68 வயதான  இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவி ரெட்டியும் அவருடைய மனைவி மாலாவையும் கடந்த 29 தேதி முதல் காணவில்லை என அவரது தம்பி போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் பாரதி நகரில் உள்ள சஞ்சீவிரெட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது 150 சவரன் நகை 50 லட்சம் ரொக்கம் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் காணாமல் போயிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில்  விசாரணை செய்ததில் சஞ்சீவிரெட்டியும் அவரது மனைவியும் ஆந்திராவிற்கு கடத்தி கொலை செய்து அங்கேயே புதைத்து 
தெரியவந்தது.

பின்னர்  இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. சொத்துக்காக தம்பதி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.