கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்...! 8 பேர் கைது..!

திருத்தணி முருகன் கோயிலில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கைது...!

கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்...! 8 பேர் கைது..!

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதி, எர்மரெட்டி பாளையம் கிராமத்தைச் சார்ந்த 40-க்கும் மேற்பட்டோர், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 10 மணியளவில், சாமி தரிசனத்திற்கு வந்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் சாமி தரிசனத்திற்கு மலை கோயிலுக்கு யாரையும் அனுமதிக்க முடியாது என்று திருக்கோயிலின் இரவு காவலர்கள் கூறியுள்ளனர்.

அதனையும் மீறி அந்த பகுதியில் கோயிலுக்கு மேலே வாகனம் நிறுத்துமிடத்தில் வந்தவர்கள் மீது திருக்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், திருக்கோயில் பகுதியில் தங்கக்கூடாது, இந்த பகுதியில் அனுமதி இல்லை, என்று கூறியுள்ளார்., அதனையும் மீறி அவர்கள் இருந்துள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது கடுமையாக தாக்கி, இரும்பு கம்பியால் அடித்துள்ளனர்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்துள்ளது. பின்னர் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில் போலீசார், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, மலைக் கோயிலில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எட்டு பேரையும் கைது செய்தனர். பலத்த காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரேணிகுண்டா பகுதியில் இருந்து வந்த 8 பேரையும் கைது செய்து திருத்தணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, இவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்து, திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.