77 பக்க கடிதத்தில் இறந்த இளைஞர் கூறியது என்ன?

77 பக்க கடிதத்தில் இறந்த இளைஞர் கூறியது என்ன?

டெல்லியில் இளைஞர் ஒருவர் தாயை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, 77 பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதிவைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்த இளைஞர்:

டெல்லி புத்விஹார் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாயிடம் பணம் கேட்டு சண்டையிட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் தாயுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அடுத்த தீர்ப்பு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. !

தகவல் அளித்த இளைஞர்:

இந்த நிலையில் அந்த இளைஞர் தனது உறவினருக்கு அளித்த தகவலின் பேரில், போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சடலமும், அழுகிய நிலையில் அவரது தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

77 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம்:

மேலும் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 77 பக்கம் கொண்ட தற்கொலை கடிதத்தத்தில், இளைஞரே தாயை கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது. அத்துடன் அந்த இளைஞர்  தாயின் சடலத்துடன் 3 நாள் உட்கார்ந்திருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தாய் முக்தி பெற வேண்டி கீதையில் கூறியபடி, கங்கை தீர்த்தத்தை உடம்பில் தெளித்து அவரது கழுத்தையும் அறுத்துள்ளது தெரியவந்துள்ளது.