போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!!

கரூரில் போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!!

குளித்தலையை அடுத்த உடையாபட்டி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர்  என்ற இளைஞர், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் சேவியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, அத்து மீறி சிறுமியின் வீட்டில் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.