கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் வழக்கறிஞர்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண் வழக்கறிஞர் மயங்கி விழுந்தார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அசீனா தனது தாய்  பாத்திமா உடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது  மனு அளிக்கும் இடத்தில் அமர்ந்திருந்த அசீனா மயங்கி விழுந்தததை பார்த்து  காவலர்கள் ஓடிவந்து அவரை மீட்டு   ஆம்புலன்ஸ் மூலம்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர.

 போலீஸார் விசாரணையில், பெண் வழக்கறிஞர் ஹசீனா,  குஜரால் என்பவரை காதலித்து வந்தது போது  கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டதும் ஆனால் குஜரால் தொடர்ந்து அசீனாவை‌ ஆபாசமாக பேசி கிண்டல் செய்து வந்ததால் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார்  அளிக்க வந்தது தெரியவந்தது. விசாரணையில் மேலும் அசீனா அளவுக்கு அதிகமான மாத்திரையை உட்கொண்டு அவர் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.. இதனை தொடர்ந்து வேப்பேரி போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: லியோ: அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கு; நாளை ஒத்திவைப்பு!