விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி...!

விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி...!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, 3 குழந்தைகளுடன் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த, விவசாயி பார்த்திபன் தனது மனைவி அஞ்சலிதேவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிகொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் மீது தண்ணீரை ஊற்றி, விசாரணை மேற்கொண்டார்.  

இதையும் படிக்க : கொரோனா ஒத்திகை...அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு...!

விசாரணையில், தனது நிலத்தில் கிணறு வெட்டுவதற்கு பக்கத்து நிலத்தவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும். 12 பேர் கொண்ட அண்ணன், தம்பிகள் தன்மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக கூறினார்.

இருப்பினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 குழந்தைகளுடன் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.