ஜல்லிக்கட்டு போட்டியில் முன்விரோதம்; 7 பேர் கொண்ட கும்பல் வெறிசெயல்!

ஜல்லிக்கட்டு போட்டியில் முன்விரோதம்; 7 பேர் கொண்ட கும்பல் வெறிசெயல்!

மதுரை  தோப்பூர் அருகே 24 வயது வாலிபரை  தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனி ஐயங்கார் பேக்கரி அருகே உள்ள பகுதியில் 7 பேர் கொண்ட  மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தனக்கன்குளம் பகுதி மக்கள் திருநகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த திருநகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநகர் காவல் துறையினரின் விசாரணையில் கொலையானவர் மூனாம்பட்டியைச் சேர்ந்த வசந்த் என்று தெரிய வந்துள்ளது. அவரும், அவரது உறவினர் வினோத் மற்றும் நண்பர் ஆகிய மூன்று பேரும் ஐயங்கார் பேக்கரி அருகே வரும்போது, கூத்தியார்குண்டை சேர்ந்த 7 பேரை கொண்ட மர்ம கும்பல் மூவரையும் சுற்றி வளைத்து வெட்டியது தெரியவந்தது. இச்சம்பவத்தில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 

திருநகர் காவல் துறையினரின்  தொடர் விசாரணையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கரடிக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வசந்தகுமார் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறையில் இருந்துள்ளார் .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியான வசந்தகுமார் கோவையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்வதற்காக நான்கு நாட்களுக்கு முன் மதுரை வந்த வசந்தகுமார். நண்பர்களுடன் தனக்கன்குளம் பகுதியில் மது அருந்த செல்லும்போது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வசந்த் குமார் மற்றும் நண்பர்களை வெட்டி கொலை செய்துள்ளனர். பழிக்கு பழியாக நடந்த இந்த கொலையால் திருநகர் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: சனிக்கிழமை கூடுகிறது; விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங்!