லாரி மீதி ஆம்னி வேன் மோதி விபத்து...ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

லாரி மீதி ஆம்னி வேன் மோதி விபத்து...ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீதி ஆம்னி வேன் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சாக்கூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் பிரியாவிற்கும் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையும் படிக்க : வீரேந்திர சேவாக் Vs விஷ்ணு விஷால்... சேவாக்கிடம், நடிகர் விஷ்ணு கேட்ட கேள்வி!!

இந்நிலையில் மகளை பேச்சுவார்த்தை நடத்தி கணவனுடன் சேர்த்து வைப்பதற்காக பழனிச்சாமி தன் மகள், பேத்தி, மனைவி உட்பட உறவினர் 8 பேருடன் ஆம்னி வேனில் சேலம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆம்னி வேன் சின்னாக்கவுண்டனூர் என்னும் பகுதியில் வந்த போது, சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக  மோதியது.

இந்த கோர விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிச்சாமி, பாப்பாத்தி, பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஓட்டுனர் விக்னேஷ் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.