5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயதுடைய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய லட்சுமணவேல்.

இவர், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  கல்வித்துறை மற்றும் சைல்டு லைனுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார், அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், 5ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு  தலைமை ஆசிரியர் நித்திய லட்சுமணவேல்.

பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனடிப்படையில்,  அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.