கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது

சென்னை மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் சர்வீஸ் சாலையில் இரவு நடந்து சென்ற 2 பேரை அந்த வழியாக வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டியும் கத்தியால் வெட்டியும் வழப்பறி செய்துள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டர்கள் காட்டுபாக்கத்தை சேர்ந்த ராஜா, ரஞ்சித்குமார், குமரேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.