வெளியூர் சென்ற மருத்துவர்...பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

வெளியூர் சென்ற மருத்துவர்...பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இரயில்வே நிலையம் அருகே பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் பிரேம் குமார் தாஸின் வீடு மருத்துவமனைக்கு அருகிலேயே உள்ளது. இதனிடையே, சென்னையில் படித்து வரும் தனது மகளைப் பார்க்க மருத்துவர் பிரேம்குமார் தாஸ் சென்னைக்கு சென்றிருந்தார். 

இதையும் படிக்க : ஒரே வாக்குறுதி...கா்நாடகாவில் யாா் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் - சீமான் அதிரடி!

இந்நிலையில், வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக காலை நேரத்தில் மருத்துவர் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, உடனடியாக மருத்துவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பீரோவை உடைத்து அதிலிருந்த 250 சவரன் நகைகளும், பல லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.