ரீல்ஸ் மோகத்தால் வந்த ஓலம்!!! நூலளவில் தப்பிய இளைஞனின் வைரல் வீடியோ!!!
ரீல்ஸ் எடுக்கும் மோக்த்தில் உயிர் விடப்பார்த்த இளைஞனுக்கு பலத்த காயம். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரீல்ஸ் வந்தது தான் வந்தது அனைவரும், தங்களை ஒரு முழு நேர நடிகர்களாகவே நினைத்துக் கொள்கின்றனர். அந்த வரிசையில், பலரும், தான் ட்ரெண்டிங்கில் வருவதற்காக சாகசங்கள் மற்றும் வித்தைகள் செய்து பல வகையான் அசிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஒரு 17 வயது சிறுவன், ரயில் முன் ரீல்சுக்காக சாகசம் செய்து கடுமையாக காயமடைந்துள்ளார். இதன் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலங்கனாவில் உள்ள ஹனம்கொண்டா பகுதியின், காசிப்பேட் ரயில் நிலையம் அருகே, வட்டெபெள்ளி டாங் பக்கம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரவீந்தர் என்பவரது மகன் சி.எச். அக்ஷய் ராஜ் என்ற 17 வயது சிறுவன், வித்தியாசமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்து ஓடும் ரயிலின் தண்டவாளம் ஒட்டி நடந்திருக்கிறார்.
ரயில் வரும் நேரத்தையும் வேகத்தையும் அறியாத அந்த சிறுவன், ரயிலால் தட்டப்பட்டு, கீழே இருந்த ஜல்லிக் கல்லில் தள்ளப்பட்டார். இதனால், அவரது முட்டி மற்றும் தோள் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே, அருகில் உள்ள மாநிலம் தழுவிய எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு, ஆம்புலென்ஸ் வைத்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அப்போது, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகவும், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அபாய நிலையைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சிறுவனது வீடியோ, நேற்று இணையத்தில் பகிரப்பட்டதை அடுத்து, இன்று படு வைரலாகி பலரும் அந்த சிறுவனை வசை பாடி வருகின்றனர்.