படுக்கை அறை நிர்வாண வீடியோக்கள்... குளியல் அறையில் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள்!! மணிகண்டன் செல்போனில் 100 க்கும் மேற்பட்ட அய்யய்யோ!!

படுக்கை அறை நிர்வாண வீடியோக்கள்... குளியல் அறையில் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள்!! மணிகண்டன் செல்போனில் 100 க்கும் மேற்பட்ட அய்யய்யோ!!

துணை நடிகையை திருமணம் செய்வதாக ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் கைப்பற்றிய செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மலேசிய பெண்ணான நடிகை சாந்தினி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உடலுறவு வைத்து கர்ப்பமாக்கினார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். நடிகை சாந்தினியின் புகாரை விசாரித்த போலீசார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறையினர் அவர் தென் மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையிலிருந்து 2 தனிப்படை போலீசார் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பின்னர்  திருநெல்வேலியில் தங்கி இருப்பதாக கிடைத்த  தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதற்குள் அவர் திருநெல்வேலியில் இருந்து பெங்களூர் சென்று விட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து நேற்று காலை பெங்களூர் அருகே ஆனைக்கல் என்கிற பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தனர். 

மணிகண்டனை கைதுசெய்த போது அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின் அவற்றை சைபர் க்ரைம் காவல்துறையிடம் கொடுத்து ஆய்வு செய்த போது அதில் மணிகண்டனும் நடிகை சாந்தினியும் ஒன்றாக நிர்வாணமாக இருப்பது போல 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. 

அந்த வீடியோக்கள் பெரும்பாலும் குளியல் அறையில் எடுக்கப்பட்டிருப்பதும், இருவரும் சேர்ந்து குளிக்கும் வீடியோக்களும் இருந்துள்ளது. மேலும் படுக்கை அறையில் மது அருந்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மைகள் பற்றி ஆராய தடயவியல் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.