விண்வெளிக்கு சென்றதாக ஊரை ஏமாற்றினாரா இங்கிலாந்து கோடீஸ்வரர் ரிச்சர்ட்.? பின்னணி என்ன?

விண்வெளிக்கு சென்றதாக ஊரை ஏமாற்றினாரா இங்கிலாந்து கோடீஸ்வரர் ரிச்சர்ட்.? பின்னணி என்ன?

கொரோனா, கால்பந்து ஆகியவற்றை தாண்டி தற்போது உலகம் முழக்க பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் என்னனா அது ரிச்சர்ட் பிரான்சன் என்ற கோடீஸ்வரரை பற்றி தான். 

காசு இருந்தால் பொதுவா கோடிஸ்வரன்கள் என்ன செய்வாங்க? கரிபியன் நாட்டுக்கு குடும்பத்தோடு tour போவாங்க.. பளபளப்பான சொகுசு கப்பலில் ஜாலியா இருப்பாங்க.. புதுசா ஒரு சொகுசு விமானம் வாங்கி உலகம் முழுவதும் பரப்பாங்க.. ஆனா? இந்த மனுஷன் இவங்க யாருக்கும் தோணாத ஒரு விஷயத்தை  பண்ணிட்டாரு...நீங்க சொகுசு விமானம் வாங்கி ஊர் சுத்துங்க,,,, நான் தனியே ராக்கெட் செய்து விண்வெளிக்கே போறேன்னு சொல்லி போய்ட்டு வந்துட்டாரு இந்த ரிச்சர்ட் பிரான்சன் என்ற கோடீஸ்வரன்.  


இங்கிலாந்து நாட்டுக்காரரான இந்த ரிச்சர்ட் அங்கு வெர்ஜின் என்ற மிக பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்காரு. அதோடு இங்கிலாந்தின் ஆறாவது மிகப் பெரிய பணக்காரரும் இவரு தான். இதன் காரணமாக நம்ம 23ம் புலிகேசிக்கே கிடைக்காத 'சர்' பட்டம்கூட இவருக்கு கிடைச்சியிருக்கு. 

இவருக்கு இப்போது இல்லங்க, 2004இல் இருந்தே விண்வெளிக்கு போனும் என்று ஆசை இருந்திருக்காம், அதனால தான் தன்னிடம் இருக்கும் காசை வச்சி 'யுனிட்டி' என்ற விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டை செய்து அதன் மூலம் விண்வெளிக்கு சென்று வந்துருக்காரு இந்த மனுஷன்...


கோடீஸ்வரர்கள் எப்போது ரிஸ்க் எடுத்து இருக்காங்க.. மத்தவங்கள வச்சி தானே செக் செய்வாங்க.. இவரும் இந்த பயணத்துக்கு போறதுக்கு முன்னாடி மூன்று முறை இந்த ராக்கெட்டில் சிலரை விண்வெளிக்கு அனுப்பி வச்சி ,அதில் வெற்றி பெற்ற பின்தான் நம்பிக்கையுடன் விண்வெளிக்கு சென்றுள்ளார். அதுமட்டுமல்ல, தன்னுடைய இந்த விமானத்த வச்சி விண்வெளி சுற்றுலா செல்லலாம் என்றும் அறிவித்திருக்காரு. 


அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 90 லச்ச ரூபாய் கொடுத்தால் நீங்கள் கூட இந்த விமானத்தில் விண்வெளி சென்று வரலாம். இதற்காக இதுவர பணக்காரர்கள், திரை நட்சத்திரங்கள் என்று 600 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கு. 

இவரது விண்வெளி பயணம் எப்படி நடந்தது என்றால், நியூமெக்சிகோ என்ற இடத்திலிருந்து 'யுனிட்டி' என்ற அவரது விண்வெளி ராக்கெட்ட, இரண்டு மிகப்பெரிய விமானங்கள் சுமந்துட்டு  சுமார் 15 கி.மீ. உயரத்தை அடஞ்சியிருக்கு , அங்கே அந்த விமானங்கள் கழற்றிக்கொள்ள, அங்கிருந்து அவரது யுனிட்டி ராக்கெட் தனியே கிளம்பி விண்வெளி நோக்கிப் பயணத்த தொடங்கியிருக்கு.  

இப்படியாக  நிலத்துக்கு மேல் 85 கிலோ மீட்டர் தூரத்தை தன் குழுவினருடன் எட்டிய ரிச்சர்ட் பிரான்சன். புவி ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் அந்த தூரத்தை அடைஞ்சதும் தன்னுடைய சீட் பெல்ட்டை கழட்டி விமானத்திற்குள் பறந்திருக்காங்க. அந்த நிலையில் சிறிது நேரம் இருந்ததும், பிறகு மீண்டும் தன் இருக்கைக்கு வந்து சீட் பெல்ட் அணிந்து மீண்டும் அந்த ராக்கெட்டில் பூமிக்கு திரும்பியிருக்காக ரிச்சர்ட்டும் அவரது குழுவினரும்.

ஆனால், இப்போ என்ன என்றால் உண்மையில் இவர்கள் விண்வெளிக்கு சென்றார்களா.? அல்லது விண்வெளிக்கு சென்று வந்தேன் என்று பொய் சொல்கிறார்களா என்ற கேள்வி உலகம் முழுக்க எழுந்திருக்கு. 

பொதுவாக நிலத்திலிருந்து 100 கிலோ மீட்டர்களுக்கு மேல் தான் விண்வெளி என்ற பகுதி இருக்கிறது என்று உலகளவில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், கடல் மட்டத்தில் இருந்து 80 கி.மீ. உயரத்தை விண்வெளியின் விளிம்பு என்று அமெரிக்கா வரையறுத்துள்ளது. ஆகவே அமெரிக்கா வரையறுத்துள்ள இந்த தொலைவை நான் கடந்துட்டன். ஆகவே தான் விண்வெளியை அடைந்துள்ளேன் என்று அறிவித்துள்ளார்  ரிச்சர்ட் பிரான்சன். 

ஆனால் இவரது இந்த பேச்சை உலகின் பல்வேறு தரப்பினர் ஏற்க மறுத்து இருக்காங்க. 100 கிலோ மீட்டரை கடந்தா தான் அது விண்வெளிக்கு சென்றதா அர்த்தம். இவரு என்னனா,,, 85 கிலோ மீட்டர் போனதுக்கே விண்வெளி போனதா சொல்லிட்டு இருக்காரு என்று விமர்சித்து வராங்க.

எது எப்படியோ,, உண்மையில் தனி ராக்கெட்டை வச்சி அவ்வளவு தூரம் போன, அந்த ரிச்சட்ட பாராட்டி தானே ஆகணும்.. வாழ்த்துக்கள் ரிச்சர்ட் பிரான்சன்.. மன்னிக்கவும் சர் ரிச்சர்ட் பிரான்சன்.