ஸ்ரீரங்கம் கோவில் கணக்கு வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு...!

ஸ்ரீரங்கம் கோவில் கணக்கு வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு...!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தை மாற்றியமைக்க கோரி வழக்கு:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் முறையாக நிர்வகிக்கவில்லை என்பதால் கோவில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க உத்தரவிட கோரியும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிக்க: அதிரடி மாற்றம்... அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு...பிளான் தான் என்ன?

அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்:

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை ஐ ஏ எஸ் அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கை துறையினரைக் கொண்டு தணிக்கை செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லாமல் விட்டதாகவும், கோவில் நிர்வாகம் முழுவதையும் மாற்றியமைக்கும்படி உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.