துருக்கி நாட்டின் அதிபருடன் நரேந்திர மோடி சந்திப்பு!

மோடி மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இருவரும் துருக்கி மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

துருக்கி நாட்டின் அதிபருடன் நரேந்திர மோடி சந்திப்பு!

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இந்த ஆண்டு  உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்ற மோடி, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.