மீண்டும் புத்துணர்வு பெறும் அலைச்சறுக்கு விளையாட்டு..!!

மீண்டும் புத்துணர்வு பெறும் அலைச்சறுக்கு விளையாட்டு..!!

2 ஆண்டுகால கொரோனா தாக்கத்தின் பின்னர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் சுற்றுலாவாசிகளறை கவரும் விளையாட்டுகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

பாலி தீவில் உள்ள கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அலைசறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது வாடிக்கை இதற்காக அலைசறுக்கு பலகைகள் வாடகைக்கு விடப்படும்.

தற்போது கொரோனா தணிந்து இருப்பதால் அங்கு அலைசறுக்கு விளையாட்டுக ளுக்கான பலகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் சிறார்களுக்கு அலைசறுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் சுற்றுலா புத்துணர்வு பெற்று இருப்பதால் பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள் என அலைசறுக்கு போட்டிக்கான பலகை மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.