"நாங்கள் குழந்தைகளை உருவாக்கும் வேலைநிறுத்தத்தில் இருக்கிறோம்"....காரணம் என்ன!!!!

"நாங்கள் குழந்தைகளை உருவாக்கும் வேலைநிறுத்தத்தில் இருக்கிறோம்"....காரணம் என்ன!!!!

தென் கொரியா மீண்டும் உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தை பதிவு செய்துள்ளது.  தென் கொரியாவில்  முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் பிறப்பு விகிதம் இருந்தது.

ஆனால்  அரசாங்கத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்த எண்ணிக்கை 0.81 ஆகக் குறைந்துள்ளது எனக் கூறியுள்ளது - முந்தைய ஆண்டை விட மூன்று புள்ளிகள் குறைந்துள்ளது. இது தொடர்ச்சியான ஆறாவது  சரிவு எனக் கூற்ப்பட்டுள்ளது.

உலகளவில் ஒப்பிடும் போது உலகின் மிகவும் முன்னேறிய பொருளாதாரங்களில் சராசரி விகிதம் 1.6 சதவீதம்.

கடந்த அறுபது வருடங்களில் கருவுறுதல் விகிதங்கள் "குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன" என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது.

தென் கொரியாவில் பிறப்புகளை விட  இறப்புகள் அதிகரித்து வருகிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தென் கொரியாவில் இது விரும்பபடுவதாக தெரிகிறது. அங்கு சில தலைமுறைகளில் குடும்ப அளவுகள் குறைந்துவிட்டன. 1970களின் தொடக்கத்தில் பெண்களுக்கு சராசரியாக நான்கு குழந்தைகள் பிறந்தன.

குறைந்து வரும் மக்கள் தொகை ஒரு நாட்டை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். சுகாதார அமைப்புகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான தேவை அதிகரிப்பதால் பொதுச் செலவினங்களின் மீதான அழுத்தம் அதிகரிப்பதைத் தவிர, இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் பொருளாதாரத்தை பாதிக்கும். தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும்.

2020 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகளைப் பதிவு செய்தபோது பரவலான எச்சரிக்கை இருந்தது.

சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தொழில் காரணிகள் குழந்தைகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2021 புள்ளிவிவரங்களுக்கு, வல்லுநர்கள் அதிக வாழ்க்கைச் செலவுகள், வீட்டு விலைகள் அதிகரிப்பு மற்றும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஆகியவை குழந்தைகளைப் பெறுவதை ஊக்கப்படுத்துவதிக் குறைக்கும் காரணிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு நெருக்கடி உருவாகிறது. தென் கொரியாவின் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே போனால், அதன் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், அதன் வயதான மக்களைக் கவனிப்பதற்கும், அதன் இராணுவத்தில் சேருவதற்கும் போதுமான மக்கள் இருக்க மாட்டார்கள்.

அரசியல் தலைவர்களுக்கு இது வரப்போகிறது என்று பல ஆண்டுகளாகத் தெரிந்திருந்தாலும் இதை சரி செய்ய முடியவில்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும்படி மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் பில்லியன் கணக்கான டாலர்களை அவர்கள் செலவழித்துவிட்டு, இது ஏன் வேலை செய்யவில்லை என்று இன்னும் தலையை யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

தென் கொரியாவில் பெண்கள் அதிகம் படித்தவர்கள், ஆனால் பணியிடத்தில் சமமானவர்கள் அல்ல. பணக்கார நாட்டிலேயே அதிக பாலின ஊதிய இடைவெளியை நாடு கொண்டுள்ளது. தென் கொரியாவில் பெரும்பாலான வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு இன்னும் பெண்களிடமே இருக்கிறது, மேலும் பெண்கள் குழந்தைகளைப் பெற்ற பிறகு வேலையை நிறுத்துவது அல்லது அவர்களின் வாழ்க்கையை தேக்கமடைய செய்வது பொதுவானது.

"நாங்கள் குழந்தைகளை உருவாக்கும் வேலைநிறுத்தத்தில் இருக்கிறோம்" என தென்கொரியாவில் ஒரு பெண் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஒரே நாடு!!ஒரே பிராண்ட்!!