காட்டுத் தீயை அணைக்க சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது.. துருக்கியில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...
துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துருக்கியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பெர்டிஸ் பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்க, ரஷ்யாவிடம் இருந்து கடனாக வாங்கிய பெரிவி பிஇ-200 விமானத்தில் தண்ணீர் மொண்டு அப்பகுதிக்கு வீரர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு நிலவிய புகைமூட்டம் காரணமாக விமானம் மலைமுகட்டில் மோதி கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் விமானத்தில் பயணித்த 5 ரஷ்ய வீரர்கள் உள்பட 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.