இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்துள்ளது!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதக்குழு நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஆக அதிகாித்துள்ளது.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழு அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. 4-வது நாளாக தொடர்ந்து வரும் போரால், பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஆக அதிகாித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்த போாில் அமொிக்காவை சோ்ந்த 9 போ் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, காசாவில் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட அளவில் அமெரிக்கர்களும் உள்ளனர் என இஸ்ரேல் அரசு தெரிவித்ததையடுத்து, வரும் நாட்களில், கூடுதல் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.