உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக நிதியுதவி...!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி அறிவித்து உள்ளது.

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம்  கூடுதலாக நிதியுதவி...!

போரால் சீரழிந்த உக்ரைனில் அதிகரித்து வரும் மனிதநேயம் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியாக வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் பலாஜஸ் உஜ்வரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உலகின் முக்கிய உணவு ஏற்றுமதியாளரான உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.