கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்...கோபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் வடகொரியா அதிபர்...

கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்...கோபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் வடகொரியா அதிபர்...

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.  சியோலும் வாஷிங்டனும் பெரிய அளவிலான கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.  இது வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் அமர்ந்திருந்த கிம் ஜாங் உன்னுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விமானப் பயிற்சி:

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.  சியோலும் வாஷிங்டனும் பெரிய அளவிலான கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் அமர்ந்திருந்த கிம் ஜாங் உன் கோபமடைந்துள்ளார். 

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் 'விஜிலண்ட் புயல்' ராணுவ பயிற்சியின் காலம் ஒரு நாள் அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியால் வடகொரியாவின் ராணுவ ஆட்சியாளர் கிம் ஜாங் உன் எரிச்சல் அடைந்து தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அவரது ஆக்ரோஷமான போக்கை வெளிப்படுத்தி வருகிறார். 

கொரியாவில் அதிகரிக்கும் பதற்றம்:

தென் கொரியா மற்றும் வடகொரியா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. 180 வட கொரிய போர் விமானங்களை தாக்கியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.  வியாழன் அன்று வடகொரியாவும், தென் கொரியாவும் ஒன்றையொன்று நோக்கி ஏவுகணைகளை வீசி தாக்கின. அவர்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஆபத்து அதிகரித்துள்ளது. 

ஒரு ஏவுகணை தென் கொரியாவின் கடல் பகுதியில் விழுந்ததாகவும் மற்றொன்று ஜப்பான் வழியாக பசிபிக் பெருங்கடலில் விழுந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக ஜப்பானும் தென்கொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:     ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!