பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

மெக்சிகோவில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மெக்சிகோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆம் தேதி நடந்த ஆசிரியர்கள் பேரணியை, அந்நாட்டு தேசிய ஆசிரிய பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்து நடத்தினார்.

அப்போது குறைவான ஊதியம் வழங்கப்படுதல் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆசிரியர்களின் ஊதியத்தை கணக்கிடும் அந்த நாட்டின் புதிய கொள்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்கள் அடிக்கடி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.