மியான்மரில் கொத்தடிமையாக்கப்பட்ட தமிழர்கள்!!

மியான்மரில் கொத்தடிமையாக்கப்பட்ட தமிழர்கள்!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு தாக்கப்பட்டு கொத்தடிமையாய் நடத்தப்படுவதாய் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து தனியார் ஏஜெண்ட் மூலம் பலர் ஐ.டி. வேலைக்காக துபாய் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணி இல்லை எனக்கூறி அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கேயும் பணி இல்லை எனக்கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைகழித்ததாகத் தெரிகிறது.

மேலும் கொடுமையாக தாக்கப்பட்டும், சட்டத்துக்கு எதிராக பணி செய்யுமாறு கட்டாயப்படுத்தியதோடு அங்கிருந்து விடுவிக்க வேண்டுமெனில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் எனவும் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பான பிரச்னையை அவர்கள் கூறும் வீடியோவும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மியான்மரில் இருந்து, பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க:  பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை யாருக்கு?!!