ஆப்கானிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்...

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்ட நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  அதிகாரப்பூர்வமாக ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்...

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்ட நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இது ஆப்கானைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.  அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பின் பின்னர் நேட்டோ படைகள் ஆப்கான் மீது போர் அறிவித்தது. என்றாலும் இந்த போரை அமெரிக்காவே முன்னின்று நடத்தியது. 20 ஆண்டுகாலப் போரில் அமெரிக்கா தோல்வியடைந்த காரணத்தால் அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறியது. தலிபான்கள் பத்தே நாட்களில் மீண்டும் ஆப்கானைக் கைப்பற்றினார்கள். பல நாடுகளும் ஆப்கானுக்குள் சிக்கி கொண்ட குடிமக்களை மீட்டு வரும் நிலையில், இந்தியாவில் இராணுவ விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.

ஆனால், ஆப்கானில் அமைய இருக்கும் தலிபான்களின் அரசு தொடர்பாக என்ன கொள்கை முடிவு எடுப்பது என்பதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தலிபான்களை எதிர்த்தால் ஆசியாவில் மேலும் தனிமைப்படும் சூழல், ஆதரித்தால் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளை இழக்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.   இது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஆப்கான் விவகாரம் மற்றும் ஆசியாவில் உருவாகியுள்ள சூழல் தொடர்பாக விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.