பட்டினியால் நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்..!!

பட்டினியால் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழக்க நேர்வதாக வறுமை ஒளிப்பு அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

பட்டினியால் நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்..!!

பட்டினியால் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழக்க நேர்வதாக வறுமை ஒளிப்பு அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் கொரோனாவை விட உணவுப்பற்றாக்குறையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உலக நாடுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா,தெற்கு சூடான், சிரியா, யோமன் உள்ளிட்ட நாடுகள் வறுமைக்கான ஹாட்ஸ்பாட்டாக திகழ்வதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 155 மில்லியனுக்கும் அதிகமானோர் உணவின்றி வாடுவதாகவும்,  அவர்களில் 3ல் 2 பகுதியினர் ராணுவ பிரச்னையால் உணவின்றி பட்டினி கிடக்க நேரிடுவதாகவும் கூறியுள்ளது.