பிரதமர் மோடியிடம் : இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாம் ரஷியா அறிக்கை

பிரதமர் மோடியிடம் : இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாம் ரஷியா அறிக்கை

உக்ரைன் ரஷ்யா போருக்கு இடையில் சிக்கி கொண்டுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் தகவல் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷிய படைகள் நேற்று உக்ரைன் மீது போர் தொடுத்து வந்தது.  முதல் நாளான நேற்றே மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனுக்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்ற பிற நாட்டினரும் அங்கு இருப்பவர்களுடன் சேர்ந்து வசமாக சிக்கியுள்ளனர். அவர்களையெல்லாம்  மீட்க அந்தந்த நாடுகள் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதில் முக்கிய பங்காக, மத்திய அரசு சார்பில் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்துவருகின்றனர். இதற்கிடையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் உக்ரைனில் இருந்து தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக  இரண்டு விமானங்களை மத்திய அரசு, ருமேனியாவிற்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் உக்ரைன் மீதான தாக்குதலில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் தகவல் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.