டெல்டாவை விட இருமடங்கு பரவும் ஒமிக்ரான்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ஒமிக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

டெல்டாவை விட இருமடங்கு பரவும் ஒமிக்ரான்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகையை விட ஒன்றரை நாள் முதல் 3 நாளில் ஒமிக்ரான் வைரஸ் இரு மடங்கு அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.