27 வருஷம் லீவே போடலையாம்..! ரூ.1கோடி நன்கொடை.. சர்ப்ரைஸ் கொடுத்த மகள்..!

பர்கர் கிங் ஊழியர் ஒருவர் 27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றதற்கு நெட்டிசன்கள் கொடுத்த மெகா சர்பிரைஸ் பார்ப்போரை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

27 வருஷம் லீவே போடலையாம்..! ரூ.1கோடி நன்கொடை.. சர்ப்ரைஸ் கொடுத்த மகள்..!

ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு காரணம் கூறி அடிக்கடி லீவு எடுப்பது வழக்கம். ஆனால், இங்க ஒருவர் 27 வருடங்களாக ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் சென்றும் அவர் வேலை பார்க்கும் நிறுவனம் அவருக்கு எதுமே செய்யவில்லை என்றாலும் நெட்டிசன்கள் செய்த காரியம் ரொம்ப பெரிதாக பார்க்க படுகிறது. அவருக்கு பரிசு மழையை பொழிந்துள்ளனர்.

பர்கர் கிங் என்ற நிறுவனத்தின் ஊழியர் கெவின் ஃபோர்டு என்பவர்.. தான் பணி புரிந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில், 27 வருடங்கள் லீவு எடுக்காமல் சென்றும்.. அவர் வேலை பார்த்த நிறுவனம் அவருக்கு ஒரு சின்ன பரிசை கொடுத்து அவரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில், கெவின் ஃபோர்டு மகள் செரினா, தனது தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி.. தான் தந்தை 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றார் என தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.

அவர் ஏன் இப்படி செய்தார் என்றால்.. தன்னுடைய தந்தைக்கு தக்க பரிசு கிடைக் வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டார்.. அவரது மகள் வெளியிட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கெவின் ஃபோர்டுக்கு பணத்தை அள்ளி வழங்கினர். GoFundMe என்ற அமைப்பின் மூலம் கெவின் ஃபோர்டு மகள் செரினா இந்த தொகையை திரட்டினார்.

இவர்களை தொடர்ந்து, பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் ரூபாய் 5000 டாலர் கொடுத்ததாக தெரிகிறது.. கெவின் ஃபோர்டின் சேவையைப் பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நன்கொடை அளித்ததில் கோடி ரூபாய் சேர்ந்து விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த கெவின் ஃபோர்டின் மகள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.

27 வருடங்களாக தன்னையும், தனது மூத்த சகோதரியையும் நன்றாக பார்த்து கொண்ட தனது தந்தைக்கு நன்றிக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டதாக மகள் செரீனா GoFundMe பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய 27 வருடங்களில் ஒரு நாள் கூட லீவு போடாமல் சென்றதற்கு அவரது நிறுவனம் ஒரு சிறிய பரிசு கொடுத்த நிலையில், நெட்டிசன்கள் அவரது உழைப்பை பாராட்டி ஒரு கோடிக்கும் மேல் கொடுத்துள்ளது பார்ப்போரை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.