தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை..!

தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை படைத்துள்ளார்.

தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை..!

இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஹர்பிரீத் சிங், 32 வயதான நிலையில் தனி ஒருவராக தென்துருவத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்கிற பெருமையும் இவரையே சேரும். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியிலும், தொடர்ந்து 40 நாட்களாக ஆயிரத்து 127 கிலோ மீட்டர் பயணம் செய்து தென்துருவத்தை அடைந்துள்ளார்.

சவால் மிகுந்த இந்த பயணத்தின் அனுபவங்களை தொடர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்த ஹர்பிரீத் சிங், தென்துருவத்தை அடைந்த சாதனை நிகழ்வை நேரலையில் வீடியோவாக ஒளிபரப்பி உள்ளார்.