தடுப்பூசி போடலையா… அப்போ இந்தியாவுக்கு போங்க! அதிபர் சர்ச்சை பேச்சு!!  

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்ட்டே  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போடலையா… அப்போ இந்தியாவுக்கு போங்க! அதிபர் சர்ச்சை பேச்சு!!   

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்ட்டே  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே தொலைபேசி வாயிலாக உரையாற்றிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்ட்டே, தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராதவர்கள் கைது செய்யப்படுவர் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இங்கு இருக்ககூடாது என தெரிவித்த அவர், இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சென்றுவிடுங்கள் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.