துருக்கியில் வெள்ளம், நிலச்சரிவு... இதுவரை 62 பேர் பலி...
துருக்கியில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்து உள்ளது.
துருக்கி நாட்டில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் கஸ்டமோனு மற்றும் சினோப் ஆகிய இரு மாகாணங்களில் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இந்த மாகாணங்களை பேரிடர் மண்டலங்களாக அதிபர் டயீப் எர்டோகன் அறிவித்து உள்ளார்.
இந்த சூழலில், 95 சதவீத மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிபர் எர்டோகன், எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் மீட்பு பணிகளை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.