டுவிட்டரில் கட்டுரைகளை படிக்க கட்டணம்...! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு...!!

டுவிட்டரில் கட்டுரைகளை படிக்க கட்டணம்...! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு...!!

டுவிட்டரில் கட்டணம் செலுத்தி செய்திகளை படிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பான அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார், அதில் "அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்படும் செய்தி நிறுவனங்களின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒரே கிளிக்கில் இந்த கட்டணத்தை செலுத்திவிடலாம் என தெரிவித்துள்ளார். மேலும், "மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் கட்டுரையைப் படிக்க விரும்பினால், அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான் எலான் மஸ்க் டிவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார். அதிலிருந்து டிவிட்டரின் கட்டைமப்பில் அதிரடியான பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார்.  

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?