பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு.!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு.!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில், நேற்று உறவினர் திருமணத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பைக்கில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ரீஹம் கானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் ரீஹம் கானுடன் இருந்த காவலர்கள் அவரை மீட்டு வேறு காரில் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளனர்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரீஹம் கான், இது இம்ரான் கான் தலைமையிலான புதிய பாகிஸ்தான் என குறிப்பிட்டதுடன், கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசை கொண்டவர்களின் நாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம் எனவும் பதிவிட்டுள்ளார். 

'Imran Khan's New Pakistan?': Ex-Wife's Barb After Alleged Firing On Car