துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் டொமினிக் ராப்...!

துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் டொமினிக் ராப்...!

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரிஷி சுனக் நியமித்தார்.

இந்நிலையில் டொமினிக் ராப் துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா அறிக்கையை வெளியிட்டுள்ளார்.